இலங்கை கடற்படையால் மேலும் 4 தமிழக மீனவர்கள் கைது- அடுத்தடுத்து 40 பேர் சிறைபிடிப்பு
சென்னை: இலங்கை கடற்படையால் மேலும் 4 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை அண்மையில் 36 தமிழக மீனவர்களை கைது செய்து அவர்களின் 5 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்தது. 36 தமிழக மீனவர்களும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையின் இந்த அட்டூழியம் தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், மீனவர் இயக்கங்கள் வலியுறுத்தின.
இதனையடுத்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் தமிழக மீனவர்கள் 36 பேரையும் உடனே விடுதலை செய்ய இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார்.
இஸ்ரேலில் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்... முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிரதமர்!
இந்த நிலையில் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் 40 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே 36 ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய கோரி அப்பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் 5-வது நாளக இன்றும் நீடிக்கிறது.