"செம லுக்.. சிம்பிள் அழகு".. ரம்யா, ஷிவானி மட்டும் இல்லேன்னா.. உச்சு கொட்டும் ரசிகர்கள்!
ரம்யா பாண்டியனுக்கும், ஷிவானிக்கும் ரசிகர்கள் ஆதரவு பெருகியபடியே உள்ளது
சென்னை: "ரம்யா.. ஷிவானி மட்டும் இல்லேன்னா இந்த நிகழ்ச்சியையே நாங்க பார்க்க மாட்டோம்.. செம லுக்கு.. செம அழகு.. எங்க அழகிகளை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடுவோமா என்று பிக்பாஸ் ரசிகர்கள் ஆதரவு கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் ஆரம்பித்து ஒருவாரம்தான் ஆகிறது.. சென்ற வாரம் கமல் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்துவிட்டு போனார்.. இந்த ஒருவார காலத்திற்குள் நெகிழ்ச்சி, மோதல், அணைப்பு, மகிழ்ச்சி என அனைத்து உணர்வும் எல்லாரிடமும் தெறித்து வந்து விழுந்து கொண்டிருக்கிறது.
இந்த வாரம் முழுவதும் அனிதா தன் மீதான அட்டென்ஷனை வைத்துகொண்டே இருந்தார். இவரது புரமோக்கள்தான் பிக்பாஸ் ரசிகர்களை நிமிர வைத்து வந்தது.. அதற்கேற்றபடியே சுரேஷூடன் மோதல் போக்கை கடைப்பிடித்தபடியே வந்தார்.. எதிர்பார்த்தபடியே மீடியாக்களிலும் பேசப்பட்டு வருகிறார்.
ஆரம்ப காலங்களில் இருந்து யார் யார் எப்படி கஷ்டப்பட்டார்கள் என்பதை ஒவ்வொரு போட்டியாளரும் விலாவரியாக எடுத்து சொல்லி வந்தனர்.. இவர்களின் இந்த பேச்சை வைத்துதான், யார் அந்த பிக்பாஸ் வீட்டுக்கு தகுதியானவர்கள் இல்லை என்பதையும் சொல்ல வேண்டும் என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.
அந்த வகையில்தான் ஓபன் நாமிஷேனும் நடந்து வருகிறது.. "இந்த வீட்ல இருக்க தகுதியில்லாதவங்க நாலு பேர் யாருன்னு சொல்லுங்க" என்று பிக் பாஸ் குரல் ஒலிக்க, டக்கென நடிகை சம்யுக்தா எழுந்து "ஆஜித், ரம்யா பாண்டியன், ஷிவானி, சுரேஷ் என்று 4 பேரை நாமினேட் செய்கிறார். மற்றவர்கள் வாழ்க்கையில் நடந்த போராட்டங்கள் இவர்கள் சந்திக்கவில்லை என்றும் விளக்கம் சொல்கிறார்.
சும்மாவே இருக்க மாட்டேங்குறாரு இந்த வேல்முருகன்.. கதறிக் கதறி அழுத அனிதா சம்பத்!
இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.. காரணம், அந்த 4 பேரில் ஷிவானியும், ரம்யாவும் இருப்பதால்தான்.. நாங்க பிக்பாஸ் பார்க்கிறதே ஷிவானிக்காகவும், ரம்யாவுக்காகவும்தான்.. இந்த அழகிகளும் இல்லேன்னா அவ்வளவுதான் என்றும் ஷிவானி, ரம்யா செல்லங்களா.. உங்களுக்காக நாங்க இருக்கோம்.. டோன்ட் ஒர்ரி என்றும் ரசிகர்கள் ஆதரவாக பதிவிட்டு வருகிறார்கள்.
நிகழ்ச்சியை துவக்கி வைத்துவிட்டு போன கமல், இன்று வரஉள்ளதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு கூடியுள்ளது.. அத்துடன் ஏதாவது அரசியல் பஞ்ச் வருமா, யாருக்கு என்ன உள்குத்து இருக்குமோ என்றும் ரசிகர்கள் கூடுதலாக காத்து கொண்டிருக்கிறார்கள்.