40 க்கு 40 வெல்ல வேண்டும்… கருணாநிதி நினைவிடத்தில் பூக்களால் அலங்கரிப்பு
சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவிடத்தில் நாற்பதுக்கு நாற்பது என பூக்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று விருதுநகரில் திமுக தென் மண்டல மாநாடு நடைபெற்றது. இதில், ஏராளமான தொண்டர்கள் அலைகடலென திரண்டனர் .
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளும் மற்ற 20 தொகுதிகளில் திமுக வேட்பாளர்களும் களமிறக்கபடுகின்றனர்.
திட்டமிட்டு காய் நகர்த்திய திமுக.. துரைமுருகனை வைத்து தேமுதிகவில் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்!
தேர்தல் பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில் , நாடாளுமன்ற தொகுதிகளில் 40 க்கு 40 வெற்றி பெற்று, அந்த வெற்றியை கருணாநிதிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது நினைவிடத்தில் பூக்களால் நாற்பதுக்கு நாற்பது என அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற உற்சாகமாக பணியாற்ற வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.