தமிழகத்தில் மருத்துவத்துறையின் நேரடி கண்காணிப்பில் உள்ளவர்கள் 43537 பேர்.. மாவட்ட வாரியாக விவரம்
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பிரச்சனை காரணமாக வெளிநாடுகளில் இருந்து வந்தோர், வெளி மாநிலங்களில் இருந்து வந்தோர் என ஒட்டுமொத்தமாக 43537 பேர் மருத்துவ துறையின் நேரடி கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், வெளிமாநிலங்களில் இருந்தவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. அப்படி மாவட்ட வாரியாக கண்காணிப்பில் உள்ளவர்களின் விவரத்தை இப்போது பார்ப்போம்.
சென்னை 4523, கன்னியாகுமரி 2780, தஞ்சை 2148, கோவை 713, கடலூர் 1434, திருச்சி 2622, புதுக்கோட்டை 2168, சிவகங்ககை 2424, திருவாரூர் 1246, நாகை 2160, ராமநாதபுரம் 765, மதுரையில் 1231, சேலம் 820, வேலூர் 363, செங்கல்பட்டு 434 பேர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
கொரோனா பாதிப்பு- தேவைப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் வீடு, வீடாக ஆய்வு நடத்தலாம்- ராமதாஸ்
இதேபோல் விழுப்புரம் 1479, தூத்துக்குடி 1248, காஞ்சிபுரம் 306, பெரம்பலூர் 1166, திருவண்ணாமலை 771, திருவள்ளூர் 477, விருதுநகர் 1495, அரியலூர் 1071, ஈரோடு 749, நாமக்கல் 602, நீலகிரி 414, திண்டுக்கல் 763, திருப்பூர் 1156, கிருஷ்ணகிரி 621, தேனி 235, கரூர் 329, தருமபுரி 373, தென்காசி 834, கள்ளக்குறிச்சி 671, ராணிப்பேட்டை 91 என மொத்தம் தமிழகம் முழுவதும் 43537 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.