இன்று மட்டும் தமிழ்நாட்டில் 474 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு... 482 பேர் டிஸ்சார்ஜ்
சென்னை: இன்று தமிழ்நாட்டில் புதிதாக 474 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,52,016ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் இன்று மட்டும் புதிதாக 474 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,52,016ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல மாநிலம் முழுவதும் ஐந்து பேர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளனர். சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபரும் கொரோனாவால உயிரிழந்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 482 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 4,009 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உள் துறை அமைச்சர் அமித் ஷா... கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார்
இன்று மட்டும் தமிழ்நாட்டில் 50,091 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் தற்போது வரை 1,75,29,663 பேருக்கு கொரோனா கண்டறியும் சோதனை செய்யப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் தலைநகர் சென்னையில் உச்சத்திலிருந்த கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. சென்னையில் இன்று 171 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 180 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.