சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 490 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Recommended Video

    #Covid-19 update தமிழகம்: 12,500ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!

    தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று புதிதாக 479 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,51,542 ஆக உயர்ந்துள்ளது.

    479 people tested positive for Coronavirus in Tamilnadu, three more deaths

    கொரோனா தொற்று காரணமாக இன்று மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு சுகாதார துறை தெரிவித்துள்ளது. அதேபோல சிகிச்சை பெற்று வந்தவர்களில் 490 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது 4,022 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவுதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு

    தமிழகத்தில் இன்று 50,815 பேருக்கு கொரோனா கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் தற்போது வரை 1,74,79,572 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

    அதேபோல தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல சிகிச்சை பெற்று வந்தவர்களில் 179 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் ஒருவர் மட்டும் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார்,

    English summary
    479 people tested positive for Coronavirus in Tamilnadu. Three more death registered in Tamilnadu today and 490 patients discharged.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X