சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரயிலில் தூங்கிய மாணவி.. சீட் ஓரமாக கையை விட்டு சில்மிஷம்.. இளைஞருக்கு 5 வருஷம் ஜெயில்!

Google Oneindia Tamil News

சென்னை: ரயிலில் தூங்கி கொண்டிருந்த மாணவிக்கு, சீட் ஓரத்தின் வழியாக கையை விட்டு பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு 5 வருட ஜெயில் தண்டனை விதித்துள்ளார் கோவை கோர்ட்டு நீதிபதி ராதிகா!

கேரள மாநிலத்தை சேர்ந்த சிறுமி.. 11-ம் வகுப்பு படிக்கிறாள்.. தன் குடும்பத்தினருடன் சென்னை சென்றுவிட்டு, கடந்த 2016, ஜூலை மாதம் 11-ந் தேதி இரவு நேரம்.. ரயிலில் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

5 year Jailed to Northern state youth in Sexual harassment case

ரிசர்வேஷன் செய்யப்பட்டது என்பதால், பர்த்தில் ஏறி சிறுமி படுத்து கொண்டாள். சிறுமி படுத்திருந்த மேல் படுக்கைக்கு கீழுள்ள படுக்கையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த 21 வயது இளைஞர் படுத்திருந்தார். அவர் பெயர் கோலாம் மோர்ட்டோஜா.

திருப்பூர் - கோவை இடையே ரயில் வந்து கொண்டிருந்தது. பெட்டியில் லைட் ஆப் பண்ணியதுமே இருக்கையின் ஓரத்தின் வழியாக கையை விட்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ய ஆரம்பித்தார். பயந்து போன சிறுமி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும் அந்த இளைஞர் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

அதனால் அந்த மாணவி கேரள ரெயில்வே போலீசில் புகார் செய்தார். ஆனால், இது திருப்பூருக்கும்- கோவைக்கும் இடையே சம்பவம் நடந்ததால் போத்தனூர் ரெயில்வே போலீசுக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இளைஞர் கோலாம் மோர்ட்டோஜா போக்சோவில் கைதானார்.

இது தொடர்பான வழக்கு கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தநிலையில் தற்போது தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது. அதில், கோலாம் மோர்ட்டோஜாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அபராத தொகையை கட்டத்தவறினால் இன்னும் 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி ராதிகா தீர்ப்பு சொன்னார்.

English summary
Kovai Court ordered 5 year Jailed to Northern state youth in Sexual harassment case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X