தமிழகத்தில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம்
சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி 54 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம். செய்யப்பட்டுள்ளனர். இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாக உளதுறை செயலாளர் எஸ்கே பிரபாகர் அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் அறிவிப்பின் படி ஐபிஎஸ் அதிகாரிகளின் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக பணியிட மாற்றம்
- சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமனம்
- நெல்லை மாநகர காவல் ஆணையராக அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்
- சேலம் நகர காவல் ஆணையராக சந்தோஷ்குமார் நியமனம்
- சென்னை தெற்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையராக கண்ணன் நியமனம்
- அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பாஸ்கரன் நியமனம்
- தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக மணிவண்ணன் நியமனம்
- திருநெல்வேலி மாநகர துணை ஆணையராக ஜெயக்குமார் நியமனம்
- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக கணேசமூர்த்தி நியமனம்
- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜியாக எம் தோமர் நியமனம்
- தேன்மொழி. சிபிசிஐடி ஐ.ஜி. ஆக நியமனம்
- கண்ணன், சென்னை மாநகர தெற்கு கூடுதல் காவல் ஆணையராக நியமன்ம்
- புவனேஸ்வரி சென்னை மாநகர போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையராக நியமனம்
- ஆர் தினகரன் மேற்கு மண்டல (கோவை) ஐஜியாக நியமனம்
- பெரியய்யா சென்னை ஐஜி (பொது) நியமனம்
- சந்தோஷ் குமார் சேலம் மாநகர காவல் ஆணையராக நியமனம்
- செந்தில் குமார், சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷ்னராக நியமனம்
Comments
English summary
Major reshuffle in the IPS postings in the state ahead of TN Elections2021, 54 IPS officers starting from IG rank to ASP ranks transferred and few also got promotions.
Story first published: Wednesday, February 17, 2021, 21:30 [IST]