தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா... இன்று 562 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று 562 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.சென்னையில் 243 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 49 பாதிப்புகள் பதிவாகின. கொரோனாவுக்கு மேலும் 4 பேர் உயிரிழந்தனர்
Recommended Video
தமிழகத்தில் இன்று 562 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,54,554 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவுக்கு மேலும் 4 பேர் உயிரிழந்தனர்.இதனால் மொத்த உயிரிழப்பு 12,517 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து மேலும் 560 பேர் குணமடைந்தனர் .சென்னையில் 243 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் மேலும் 54,864 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 1,74,74,349 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 55,051 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 1,77,91,275 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 49 பாதிப்புகள் பதிவாகின. செங்கல்பட்டில் 48 பாதிப்புகளும், திருவள்ளூரில் 39, காஞ்சிபுரத்தில் 25 பாதிப்புகளும் பதிவாகின. தமிழகத்தில் மெல்ல, மெல்ல கொரோனா அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.