கொரோனா: தமிழகத்தில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரிப்பு தொடருகிறது! இன்றும் 6,005 பேர் குணமடைந்தனர்
சென்னை: தமிழகத்தில் மேலும் 5834 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6,005 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மேலும் கொரோனாவால் ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில் இருந்து வருகிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவில்தான் கொரோனாவுக்கு தமிழகத்தைவிட அதிகம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 5834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு 6,005 பேர் குணமடைந்தும் உள்ளனர்.
இன்னொரு பக்கம் கொரோனாவால் மொத்தம் 118 பேர் ஒரே நாளில் உயிரிழந்தும் உள்ளனர். தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,08,649 ஆக அதிகரித்தது. கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது.
எனது மகளுக்கே இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது.. முதல் கொரோனா தடுப்பூசி குறித்து ரஷ்யா அதிபர்!
கொரோனாவால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆனவர்கள் மொத்த எண்ணிகை 2,50,680 ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5,159 ஆகும். தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 52,810 மட்டுமே என்கிறது சுகாதாரத்துறை அமைச்சக அறிக்கை.