சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழ்நாட்டில் 6,162 பேருக்கு கொரோனா உறுதி.. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50,000-க்கும் கீழ் குறைவு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 6,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 155 பேர் உயிரிழந்துள்ளனர்.

கல்வி கட்டணம் எவ்வளவு.. 'டிசி', ஆன்லைன் கிளாஸ், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு '6' அறிவுறுத்தல் கல்வி கட்டணம் எவ்வளவு.. 'டிசி', ஆன்லைன் கிளாஸ், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு '6' அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 34-வது நாளாக குறைந்துள்ளது. கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

 6,162 பேருக்கு கொரோனா

6,162 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது ஊரடங்கு தந்த பலன் காரணமாக கொரோனா 2-வது அலை கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குணமடைந்தோர் எண்ணிக்கை

குணமடைந்தோர் எண்ணிக்கை

இதனால் மொத்த பாதிப்பு 24,49,577 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 155 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 15 பேர் இறந்துள்ளனர். கோவையில் மேலும் 12 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 31,901 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 9,046 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 23,67,831 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்

கோவை முதலிடம்

கோவை முதலிடம்

49,845 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,67,268 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3,10,18,415 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 372 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 7-வது நாளாக பாதிப்பு 500-க்கும் கீழே குறைந்து விட்டது. சென்னையை விட கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. கோவையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

மதுரையில் குறைவு

மதுரையில் குறைவு

கோவையில் மட்டும் 756 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 262 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 86 பேருக்கும், மதுரையில் 112 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 115 பேருக்கும், திருவள்ளூரில் 169 பேருக்கும், திருச்சியில் 235 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 386 பேருக்கும், விருதுநகரில் 82 பேருக்கும், ஈரோட்டில் 641 பேருக்கும், சேலத்தில் 419 பேருக்கும், நாமக்கல்லில் 257 பேருக்கும், தஞ்சாவூரில் 305 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

English summary
Corona infection has been confirmed in 6,162 people in Tamil Nadu today. Another 155 died in the corona
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X