தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் கூல் தகவல்
சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உள்ளிட்டவற்றால் மழை பெய்த வண்ணம் உள்ளது. நேற்றைய தினம் சென்னையில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது.
இதனால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இன்று காலை கூட சென்னையில் லேசான மழை ஆங்காங்கே பெய்தது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில் ஆந்திராவில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது.
வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்திய ஊடுருவல்...சீன அதிபர் ஜிங்பிங்கிற்கு மிகப்பெரிய தோல்வி..அமெரிக்க நாளிதழ் விமர்சனம்!!
கள்ளக்குறிச்சி, கோவை, நீலகிரி, புதுச்சேரியிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.