சரிவை நோக்கி சென்னை.. இன்று ஒரே நாளில் 695 பேர் தொற்றால் பாதிப்பு.. டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் அதிகம்!
சென்னையில் இன்று 695 பேருக்கு மட்டும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மேலும் மேலும் குறைந்து வருகிறது.. சென்னையில் இன்று ஒரே நாளில் 695 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்... நேற்று 747 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து வருவது ஆறுதலை தந்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே தொற்று வேகமாக குறைந்து வருகிறது... இதற்கு தமிழக அரசு மேற்கொண்டு வரும் சீரிய முயற்சிதான் காரணம்.. மழைக்காலத்தில் இந்த வைரஸ் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது குறைவாகவே பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,75,518 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 4,029 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 10,983 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 695 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 197077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 144 புதிய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
நேற்றைவிட இன்று பாதிப்பு குறைவு.. தமிழகத்தில் 2,522 பேருக்கு தொற்று.. இதுவரை 6.75 லட்சம் பேர் குணம்!
அதேபோல, திருவள்ளூர் 115, கோவையில் 209, கடலூர் 45, திருச்சி 42, சேலம் 146, திருப்பூர் 99 என்ற அளவில் பாதிப்பு இருந்தது. பெரும்பாலான மாவட்டங்களில் இரட்டை இலக்கத்திலேயேதான் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி உள்ளது.. வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 4,029 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 75 ஆயிரத்து 518 ஆக அதிகரித்துள்ளது.. அதேபோல, வைரஸ் தாக்குதலுக்கு இன்று 27 பேர் உயிரிழந்துள்ளனர்... இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 983 ஆக அதிகரித்துள்ளது.