சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்களே உஷார்.. தமிழகத்தில் நாளுக்கு, நாள் அதிகரிக்கும் கொரோனா.. தினசரி பாதிப்பு 8,000-ஐ நெருங்கியது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

Recommended Video

    #Covid-19 update தமிழகம்: இன்று மட்டும் 8 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு!

    தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் ஜெட் வேகத்தில் சென்று வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்த போதிலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

    தமிழகத்தில் கட்டுப்பாடுகள்

    தமிழகத்தில் கட்டுப்பாடுகள்

    கொரோனாவை தடுக்க தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன. பஸ்களில் பயணிக்க கட்டுப்பாடு, தியேட்டர்கள், கோவில்கள், மால்கள் என அனைத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8,000-ஐ நெருங்கியுள்ளது.

    இன்று 7,819 பேருக்கு பாதிப்பு

    இன்று 7,819 பேருக்கு பாதிப்பு

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 9,54,948 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 12,970 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 3,464 பேர் குணமடைந்துள்ளனர்.

    சிகிச்சை பெறுவோர் எத்தனை பேர்?

    சிகிச்சை பெறுவோர் எத்தனை பேர்?

    இதுவரை மொத்தம் 8,87,663 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 54,315 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 96,513 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 2,04,50,554 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டில் அதிகரிக்கும் பாதிப்பு

    செங்கல்பட்டில் அதிகரிக்கும் பாதிப்பு

    சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையில் இன்று மட்டும் 2,564 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 772 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 540 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 124 பேருக்கும், மதுரையில் 199 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    In Tamil Nadu, 7,819 people have been diagnosed with coronavirus in a single day today. Another 25 people were killed in the corona
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X