சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அண்ணனை செஞ்சவனை போட வந்திட்டோம்டா.." டிக்டாக் வெளியிட்ட ரவுடிகளை தூக்கி உள்ளே போட்ட போலீஸ்!

போலீசுக்கு மிரட்டல் விடுத்த ரவுடிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    போலீசுக்கு கானா பாடல் மூலம் மிரட்டல் விடுத்த ரவுடிகள்.. 7 பேர் கைது -வீடியோ

    சென்னை: "வந்திட்டோம்டா.. வந்திட்டோம்டா... எங்க ஆனந்த் அண்ணனை செஞ்சவனை போட வந்திட்டோம்டா.." என்று பாட்டிலேயே போலீசாருக்கு மிரட்டல் விடுத்த ரவுடிகள் இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.

    போன வருஷம் ஜூலை 2-ந்தேதி ராத்திரி சென்னை ராயப்பேட்டை தர்கா அருகே ஒரு கும்பல் குடிபோதையில் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தது. இந்த கும்பலுக்கு தலைவன் ஆனந்தன் என்பவன்.

    அந்த சமயத்தில் ரோந்துக்கு வந்த தலைமைக் காவலர் ராஜவேல், அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தார். ஆனால் அந்த கும்பலோ, போதைவெறியில் ராஜவேல் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ராஜவேலு படுகாயமடைந்து, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    தூக்க கலக்கம்.. ஓவர் ஸ்பீட்.. விடிகாலை ஏற்பட்ட இரு விபத்துகள்.. 15 பேர் பலி.. பலர் படுகாயம்தூக்க கலக்கம்.. ஓவர் ஸ்பீட்.. விடிகாலை ஏற்பட்ட இரு விபத்துகள்.. 15 பேர் பலி.. பலர் படுகாயம்

    என்கவுண்டர்

    என்கவுண்டர்

    இதையடுத்து அந்த ரவுடிகள் ஜிந்தா, வேல்முருகன், அஜித்குமார், சீனு, மகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் ஆனந்தன் எஸ்.ஆகிவிட்டார். ஜூலை 4-ந்தேதி ஆனந்தனை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால், போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதால், ஆனந்தன் என்கவுன்டர் செய்யப்பட்டார்.

    சுடுகாடு

    சுடுகாடு

    இந்நிலையில், கடந்த 4-ந்தேதி ஆனந்தனின் முதலாமாண்டு நினைவுநாளை சக நண்பர்கள், ஆதரவாளர்கள் அனுசரித்தனர். இதற்காக ஆனந்தனை புதைத்த சுடுகாட்டின் பின்னணியில் ஒரு கானா பாட்டையும் பாடினார்கள்.

    மிரட்டல்

    மிரட்டல்

    அதில், " வந்திட்டோம்டா.. வந்திட்டோம்டா... எங்க ஆனந்த் அண்ணனை செஞ்சவனை போட வந்திட்டோம்டா.." என்ற வரிகள், மற்றும் ஆனந்தனை புகழ்ந்தும் வரிகள் இருந்தன. கானா பாட்டிலேயே போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இவர்கள், இந்த வீடியோவை இணையத்திலும் போட்டுவிட்டனர்.

    கைது

    கைது

    வீடியோ வைரலானதையடுத்து, ராயப்பேட்டை போலீசாருக்கும் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, பாட்டாலேயே கொலை மிரட்டல் விடுத்த, சுரேஷ்குமார், விஜய், கார்த்திக், பிரசாத், கானா பாடகர் மணிகண்டன், சமீர் பாட்ஷா ஆகிய 7 பேரை ராயப்பேட்டை போலீஸார் கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.

    English summary
    In Chennai, Seven people have been arrested for allegedly threatening police with Gana song in Tik Tok Video
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X