அந்த தாத்தா பேரு கேட்டாரு.. இங்கெல்லாம் தொட்டாரு.. 10 வயது குழந்தையை சீரழித்த 73 வயது கொடூரன்!
10 வயது சிறுமியை சில்மிஷம் செய்த 73 வயது நபர் கைது செய்யப்பட்டார்
சென்னை: "அந்த தாத்தா என் பேர் கேட்டாரு.. அப்பறம் என்னை இங்கெல்லாம் தொட்டாரும்மா" என்று சொல்லும்போதே 10 வயது குழந்தை கதறி அழுதாள்.
அம்பத்தூரில் வசித்து வரும் அந்த தம்பதிக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகளுக்கு 10 வயதாகிறது.. இளைய மகளுக்கு 6 வயதாகிறது.. 2 குழந்தைகளும் அங்கிருந்த ஒரு பள்ளியில் படித்து வருகிறார்கள்.
சாயங்காலம் ஆனால், இருவரும் டியூஷன் சென்றுவிடுவார்கள். அப்படித்தான் போன 30-ம் தேதி டியூஷனுக்கு போனார்கள். பிறகு 10 வயது மகள் அழுது கொண்டே வீட்டுக்கு வந்தாள்.
இதனால் என்ன ஆச்சு என்று அம்மா கேட்கவும், "நான் டியூஷன் முடிச்சிட்டு வந்துட்டே இருந்தேன்.. அந்த தெருவில் ஒரு தாத்தா என் பேர் கேட்டார், அப்பறம் இங்கெல்லாம் தொட்டார்" என்று குழந்தை சொல்லும்போதே அழுதுவிட்டாள். இதனால் கொதித்து பெற்றோர், அம்பத்தூர் மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்தனர்.
சுட போறேன்.. மிரட்டிய வெற்றிவேலன்.. தெறித்து ஓடிய மக்கள்.. சரமாரி கத்திக் குத்து.. கோவையில் ஷாக்!
அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட நபரை விசாரித்தனர். அவர் பெயர் சுந்தரமூர்த்தி, 73 வயதாகிறது.. இதை பற்றி கேட்டதற்கு முதலில் மறுத்தவர், பிறகு போலீசார் தங்கள் பாணியில் கேட்டபிறகு உண்மையை ஒப்புக் கொண்டார். சுந்தரமூர்த்தி வீட்டு வழியாகத்தான் குழந்தை தினமும் டியூஷனுக்கு போவாளாம்.. இதை கவனித்த பிறகுதான், இப்படி காத்திருந்து வேலையை காட்டி உள்ளார்.
இவர் சென்னையில் உள்ள அரசுக் கல்லூரியில் செக்யூரிட்டியாக வேலைபார்த்து ரிடையர் ஆனவராம்.. சிறுமியிடம் சில்மிஷம் செய்த 73 வயது தாத்தா, போக்சோவில் கைதாகி ஜெயிலில் உள்ளார்.