ஒரு சின்ன ஆறுதல்.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் சரிவு.. இன்று 2708 பேருக்கு தொற்று!
சென்னையில் இன்று 747 பேருக்கு மட்டும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: தமிழகத்தில் மேலும் மேலும் குறைந்து வருகிறது கொரோனாவைரஸ் பாதிப்பு. சென்னையில் இன்று 747 பேருக்குத்தான் தொற்று கண்டறியப்பட்டது.
தமிழகத்தில் கடந்த பல நாட்களாக தொற்று வேகமாக குறைந்து வருகிறது. மழைக்காலத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது குறைவாகவே பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 2708 பேருக்கு தமிழகத்தில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டங்களைப் பொறுத்தவரை தொடர்ந்து சென்னையில்தான் அதிக பாதிப்பு இருந்து வருகிறது. அதேசமயம், அதுவும் கூட தற்போது 1000க்குள் என்ற அளவில் கட்டுக்குள் உள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 747 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 பேராகும். செங்கல்பட்டில் 143 புதிய பாதிப்பு கணட்றியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் இன்று தமிழகத்திலேயே அதிக அளவாக 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் சரிவு.. இன்று 2708 பேருக்கு தொற்று!
கோவையில் 253, காஞ்சிபுரம் 119, சேலம் 165, திருவள்ளூர் 133, திருப்பூர் 109 என்ற அளவில் பாதிப்பு இருந்தது. மற்ற மாவட்டங்களில் இரட்டை இலக்கத்திலேயே இன்று பாதிப்பு பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 6,61,489 பேர் டிஸ்சார்ஜ் ஆயுள்ளனர். இன்றைய பலியான 32 பேரையும் சேர்த்தால் இதுவரை மொத்தம் 10,956 பேர் உயிரிழந்துள்ளனர்.