குறைகிறது தொற்று.. தமிழகத்தில் இதுவரை 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு
சென்னையில் இன்று 756 பேருக்கு மட்டும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.. சென்னையில் இன்று ஒரே நாளில் 756 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே தொற்று வேகமாக குறைந்து வருகிறது... அதேபோல டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே வருகிறது.. இதற்கு தமிழக அரசு மேற்கொண்டு வரும் சீரிய முயற்சிதான் காரணம்..
இனி வரும் காலங்களில் இந்த தொற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது குறைவாகவே பாதிப்பு கண்டறியப்பட்டு வருவது ஆறுதலை தந்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,83,464 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 4,087 பேர் குணமடைந்துள்ளனர்.
அதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்
அதேபோல, கொரோனாவால் இன்று மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 11,053 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 756 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 198487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 251 பேரும், சேலத்தில் 170 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு 148, திருவள்ளூர் 146, ஈரோடு 124 பேர் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் இரட்டை இலக்கத்திலேயே பாதிப்படைந்தோர் எண்ணிக்கை உள்ளது.