சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 779 பேர் பாதிப்பு
சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 779 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 194901 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது. அண்மைக்காலங்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த வண்ணம் உள்ளது.
மாவட்டங்களில் கொரோனா நிலவரத்தை பார்த்தோமேயானால் சென்னையில் இன்று 779 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் இன்று ஒரே நாளில் 1,240 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார்கள்.
சென்னையில் இன்று 3 பேர் உயிரிழந்தனர். அரியலூரில் இன்று ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 169 பேருக்கும், கோவையில் 287 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 140 பேருக்கும் நாமக்கல்லில் 83 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 2,886 பேருக்கு கொரோனா.. 7 லட்சத்தை தாண்டிய பாதிப்பு!
சேலத்தில் 148 பேருக்கும் திருவள்ளூரில் 165 பேருக்கும், திருப்பூரில் 101 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 194901 பேருக்கும் கோவையில் 41555 பேருக்கும் செங்கல்பட்டில் 42407 பேருக்கும் கன்னியாகுமரியில் 14609 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.