தமிழ்நாட்டில் மேலும் 8,183 பேருக்கு கொரோனா பாதிப்பு.. தினசரி உயிரிழப்பு குறைகிறது!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 8,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 180 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 29-வது நாளாக குறைந்துள்ளது. தினசரி பாதிப்பில் கோவை தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.
சரியும் கொரோனா
கொரோனாவை தடுக்க தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி உயிரிழப்பும் கணிசமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8,183பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்த பாதிப்பு எத்தனை?
இதனால் மொத்த பாதிப்பு 24,14,680 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 180 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 31 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 31,015 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 18,232 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 23,04,885 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்
சென்னையில் குறைகிறது
78,780 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,65,102 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3,01,90,838 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 468 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 2-வது நாளாக பாதிப்பு 500-க்கும் கீழே குறைந்து விட்டது. ஆனால் உயிரிழப்பில் சென்னைதான் முதலிடம் வகிக்கிறது. சென்னையை விட கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.
தஞ்சையில் குறைகிறது
கோவையில் மட்டும் 1014 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 334 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 128 பேருக்கும், மதுரையில் 145 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 150 பேருக்கும், திருவள்ளூரில் 207 பேருக்கும், திருச்சியில் 242 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 489 பேருக்கும், விருதுநகரில் 119 பேருக்கும், ஈரோட்டில் 933 பேருக்கும், சேலத்தில் 533 பேருக்கும், நாமக்கல்லில் 328 பேருக்கும், தஞ்சாவூரில் 361 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.