8 மாவட்டங்களில் இன்று அதீத மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் எப்படி?
Recommended Video
சென்னை: தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுபோல் புதுவையிலும் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கிழக்கு திசை காற்று, மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் இன்றும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர், விழுப்புரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதீத மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் புதுவையிலும் ஒரு சில மாவட்டங்களில் இன்று அதீத மழைக்கு வாய்ப்புள்ளது.
கோவையில் கனமழை.. மேட்டுப்பாளையம் அருகே வீடுகள் இடிந்து விழுந்து 9 பேர் பலி
கனமழை
சென்னையை பொருத்தவரை மிதமான மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அது போல் நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும்.
மழை பெய்யும்
மேலும் நாளை முதல் படிப்படியாக மழை பெய்யும் என ஏற்கெனவே இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளன. அவை மேலும் வலுவடையும்.
எச்சரிக்கை
லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் சூறாவளி காற்று வீசும். எனவே மீனவர்கள் அப்பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் அலர்ட்
இன்று சில பகுதிகளில் இந்திய வானிலை மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மழையானது 8 செ.மீ.ருக்கு மேல் பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. நேற்றைய தினம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் கனமழை கொட்டி தீர்த்தது.