சென்னையில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. மாநகரவாசிகள் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!
சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 845 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 192527 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,97,116 பேராகும். அண்மைக்காலங்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த வண்ணம் உள்ளது.
மாவட்டங்களில் கொரோனா நிலவரத்தை பார்த்தோமேயானால் சென்னையில் இன்று 845 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் இன்று ஒரே நாளில் 1,183 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார்கள்.
கொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கையே அதிகம்.. தமிழகத்தில் சந்தோஷ அலை!
சென்னையில் இன்று 11 பேர் உயிரிழந்தனர். அரியலூரில் இன்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 159 பேருக்கும், கோவையில் 314 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 106 பேருக்கும் நாமக்கல்லில் 68 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சேலத்தில் 198 பேருக்கும் திருவள்ளூரில் 180 பேருக்கும், திருப்பூரில் 120 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 192527 பேருக்கும் கோவையில் 40690 பேருக்கும் செங்கல்பட்டில் 41845 பேருக்கும் கன்னியாகுமரியில் 14470 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.