சென்னையில் 1000-த்தை விட குறைந்த கொரோனா பாதிப்பு.. நிம்மதி பெருமூச்சுவிட்ட தலைநகர்வாசிகள்!
சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 885 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 1,90,949 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,90,936 பேராகும். அண்மைக்காலங்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த வண்ணம் உள்ளது.
மாவட்டங்களில் கொரோனா நிலவரத்தை பார்த்தோமேயானால் சென்னையில் இன்று ஒரே நாளில் 885 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் இன்று ஒரே நாளில் 1,236 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார்கள்.
இன்று 16 பேர் உயிரிழந்தனர். அரியலூரில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 241 பேருக்கும், கோவையில் 290 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 92 பேருக்கும் நாமக்கல்லில் 98 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 3,536 பேருக்கு கொரோனா.. ஆனாலும் ஒரு குட் நியூஸ் இருக்கே!
சேலத்தில் 192 பேருக்கும் திருவள்ளூரில் 172 பேருக்கும், திருப்பூருக்கும் 140 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 1,90,949 பேருக்கும் கோவையில் 40108 பேருக்கும் செங்கல்பட்டில் 41427 பேருக்கும் கன்னியாகுமரியில் 14362 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.