விடியற் காலையில் வீட்டின் முன்பு கோலம் போட்ட சிறுமி.. வாயை பொத்தி தூக்கி.. சென்னையில் கொடுமை
சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் வீட்டின் முன்பு கோலம் போட்ட 14 வயது சிறுமியை வாயை பொத்தி தூக்கி சென்று மறைவிடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை விருகம்பாக்கத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 14 வயது சிறுமி, தனது வீட்டு வாசலில் கோலம் போட சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் சிறுமி வீட்டுக்குள் வரவில்லை.
இதனால், சந்தேகமடைந்த பெற்றோர் வெளியில் சென்று பார்த்தபோது, சிறுமியை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியபோது, சிறுமி அழுது கொண்டே வீடு திரும்பினாள்.
அவளிடம் விசாரித்தபோது, ''கோலம் போட்டுக் கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபர் தன்னை வாயை பொத்தி தூக்கிச்சென்று, மறைவிடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறியிருக்கிறாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விக்னேஷ் மீது போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார், விக்னேஷை தேடி வருகின்றனர்.