சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்னிக்கே அருணகிரி சொன்னாரு.. ரஜினி வந்தாதான் மழை பெய்யும்னு.. யாராச்சும் கேட்டீங்களா!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜினி வந்தாதான் மழை பெய்யும் - மீண்டும் வைரலாகும் ஜோதிடரின் கணிப்பு

    சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் வரை மழைக்கும் வாய்ப்பில்லை என்று ஒரு ஜோசியக்காரர் போட்ட பிட்டு, அதாவது பிட் நோட்டீஸ் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா, வந்தா எப்ப வருவார், எப்படி வருவார்.. இப்படி பல்வேறு இத்யாதி இத்யாதி கேள்விகளுக்கு ரஜினியிடமே கூட பதில் இல்லை.

     A bit notice on Rajinikanth goes viral

    இந்த நிலையில் சிவசக்தி அருணகிரி என்ற ஒரு ஜோசியக்காரர் பிட் நோட்டீஸை அடித்து 2017ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த பிட் நோட்டீஸ் சொன்னது இதுதான்...

    இயற்கையின் தீர்ப்பு (பார்ரா!)

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தே தீர வேண்டும். ஏனெனில் அவர் வராத காரணத்தினால் இயற்கை கட்டுப்பட்டு இருக்கிறது. இனியும் வரக் கால தாமதானால், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலமும் கடும் வறட்சியை சந்திக்க நேரிடும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், மாத்திரமே, இயற்கை மழை பொழியும். நிலத்தடி நீர் மட்டம் உயரும், மக்களுக்காக அவர் அரசியலுக்கு வந்தே தீர வேண்டும். இது இயற்கையின் தீர்ப்பு. இப்படிக்கு சிவசக்தி அருணகிரி என்று கூறியுள்ளார்.

    என்னோட ராசி நல்ல ராசின்னு நாளைக்கு பாடப்போறவங்க யார்- லோக்சபா தேர்தல் ரிசல்ட் 2019 என்னோட ராசி நல்ல ராசின்னு நாளைக்கு பாடப்போறவங்க யார்- லோக்சபா தேர்தல் ரிசல்ட் 2019

    பிட் நோட்டீஸ் வெளியாகி 2 ஆண்டுகளாகிய நிலையில் இப்போது மீண்டும் அது வைரலாகியுள்ளது. காரணம், இப்போதும் மழை பெய்யவில்லை, ரஜினியும் இன்னும் அரசியலுக்கு வந்த பாடில்லை. ரஜினியை வச்சு ரொம்பத்தான் காமெடி பண்றாய்ங்களே!

    English summary
    A bit notice on Actor Rajinikanth has gone viral in social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X