நெருப்பில் வெந்து கருகிய கங்காராம்.. கடைசிவரை அஞ்சலி செலுத்தியது யார் தெரியுமா?
உணவளித்த நபருக்கு மாடு ஒன்று இறுதி அஞ்சலி செலுத்தி உள்ளது
Recommended Video
சென்னை: மக்களே.. விலங்குகள் கிட்ட இருந்து நாம கத்துக்கு இன்னும் நிறைய விஷயம் பொதிந்து உள்ளது. அப்படித்தான் ஒரு நெகிழ்ச்சி தருணம் சென்னை அருகே நடந்துள்ளது.
சென்னை அருகே வேப்பம்பட்டில் வசித்து வந்தவர் கங்காராம். இவர் வீட்டு வழியே தினமும், மாடு ஒன்று தேடி வருமாம். காங்காராமும் இப்படி வரும் மாட்டுக்கு கீரை மற்றும் ரொட்டிகளை தருவதை பழக்கமாக வைத்துள்ளார்.
ஒரு மாடு மட்டுமில்லாமல், அவர் வீட்டில் வந்து நிற்கும் ஆடுகள், உள்பட எல்லா பிராணிகளுக்குமே முடிந்தவரை சாப்பிட தந்துள்ளார். இந்நிலையில், கங்காராம் நேற்று திடீரென இறந்துவிட்டார்.
வழக்கமாக வரும் மாடு, கங்காராம் வீட்டுக்கு வந்துள்ளது. எப்பவுமே தனக்கு கீரையை அள்ளி போடும் அந்த நபரை காணாமல் மாடு கண்கள் மேய்ந்தது. வீட்டை சுற்றிலும் ஒரே கூட்டம்.. ஒப்பாரி சத்தம்.. அழுகை குரல்.. பிறகுதான் அங்கு கங்காராம் சடலமாக கிடந்ததை மாடு பார்த்துள்ளது.
தனக்கு சாப்பாடு இல்லாமல் போய்விட்டதே என்று மாடு அங்கிருந்து போகவில்லை. அப்படியே வாசற்படியில் உட்கார்ந்துவிட்டது. கங்காராமுக்கு இறுதி ஊர்வலம் நடந்தது. ஊரே அவரை அடக்கம் செய்ய மயானத்துக்கு சென்றார்கள். பின்னாடியே இந்த மாடும் சென்றது. கங்காராம் உடல் மயானத்தில் வைத்து எரிக்கப்பட்டது. அடக்கம் செய்த பிறகு திரண்டு வந்த ஊரே திரும்பி சென்றுவிட்டது.
ஆனால் அந்த மாடு கங்காராம் உல் எரியூட்டப்பட்ட இடத்துக்கு அருகிலேயே உட்கார்ந்துவிட்டது. அந்த சமயத்தில், இந்த வாயில்லா ஜீவன் என்ன நினைத்திருக்குமோ, என்னென்ன நினைவுகள் அதற்குள் ஓடியிருக்குமோ தெரியாது. கங்காராம் உடல் ஒரு பக்கம் எரிந்து சாம்பலாக, மற்றொரு பக்கம் கண்ணீருடன் மாடு அஞ்சலி செலுத்தி கொண்டிருந்தது. கங்காராம் உடல் கரிக்கட்டையான பிறகுதான் அங்கிருந்து நகர்ந்து சென்றதாம் இந்த மாடு!