சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தூக்க கலக்கத்தில் பஸ்ஸை ஓட்டிய ஓட்டுநர்.. பாடி மேம்பாலத்தில் லாரி மீது மோதல்.. நடத்துநர் பலி

Google Oneindia Tamil News

Recommended Video

    தூக்க கலக்கத்தில் பஸ்ஸை ஓட்டிய ஓட்டுநர்.. பாடி மேம்பாலத்தில் லாரி மீது மோதல்.. நடத்துநர் பலி

    சென்னை: ஆந்திரத்திலிருந்து சென்னைக்கு வந்த பேருந்து கன்டெய்னர் லாரி மீது மோதியதில் அரசு பேருந்து நடத்துநர் பலியாகிவிட்டார். இதில் 15 பேர் காயமடைந்தனர்.

    ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து சென்னை கோயம்பேடு நோக்கி அரசு பேருந்து பயணிகளுடன் நள்ளிரவு 2.50 மணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது பாடி மேம்பாலம் தாதாங்குப்பம் அருகே பேருந்து பயணித்துக் கொண்டிருந்தது.

    A Government bus which plies from Andhra to Chennai meet with an accident near Chennai Padi bridge

    அச்சமயம் பேருந்தானது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது பலமாக மோதியது. இதில் பேருந்து நடத்துநர் வீரமுத்து உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர். மேலும் 12 பேர் லேசான காயமடைந்தனர்.

    கை காலை உதைத்து விளையாடிய குழந்தை.. மண்ணுக்குள் புதைக்க போன அப்பா.. தாத்தா!கை காலை உதைத்து விளையாடிய குழந்தை.. மண்ணுக்குள் புதைக்க போன அப்பா.. தாத்தா!

    சம்பவம் குறித்து தகவலறிந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விரைந்து சென்று மீட்பு பணிகளை செய்தனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வீரமுத்து உயிரிழந்தார். இதையடுத்து மீதமுள்ள 15 பேரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக காயமின்றி தப்பிய பயணிகள் புகார் கூறியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    English summary
    A Government bus which plies from Andhra to Chennai meet with an accident near Chennai Padi bridge, conductor of the bus died and 15 more passengers were injured.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X