சேலத்தில் நடுரோட்டில் கேபிஎன் ஆம்னி ஏசி பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பதற்றம்
சென்னை: சேலத்தில் நடுரோட்டில் கே.பி.என். ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதால் பதற்றம் ஏற்பட்டது.
சேலத்தில் கே.பி.என். ஆம்னி பேருந்துகள் தலைமை அலுவலகம் அருகே பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதில் ஒரு ஏசி பேருந்து இன்று பகல் 2 மணி அளவில் திடீரென தீ பிடித்து எரிந்தது.
பேருந்தில் பற்றிய தீ மளமளவென பிடித்தது. இதனால் பல அடி உயரத்துக்கு கரும்புகை கிளம்பியது. இதையடுத்து அப்பகுதியில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
பேருந்து முற்றிலும் எரிந்து கொண்டிருந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
Comments
English summary
A KPN Luxury Bus Caught fire in Salem on today.