வலியால் துடித்த பாலா... சென்னையில் மூடப்பட்ட ரயில்வே கேட்.. 15 நிமிட தாமதத்தால் பறிபோன உயிர்
சென்னை: சென்னை சிங்கபெருமாள் கோயில் ரயில்வே கேட் மூடப்பட்டதால் 15 நிமிடம் தாமதமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்.. இதனால் அந்த பகுதியில் நடந்து வரும் மேம்பால பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையை அடுத்த மறைமலைநகர் அருகே உள்ள திருக்கச்சூர் மனுமேடு பகுதியை சேர்ந்த பாலா பிளம்பர் மற்றும் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார். இவருக்கு செவ்வாய்கிழமை மாலையில் திடீரென வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் உடனடியாக உறவினர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பாலாவை ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளார்கள்.

திருக்கச்சூர் மனுமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட்டை கடந்து தான் எந்த பகுதிக்கும் செல்ல முடியும்.. அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் அந்த பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த சூழலில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பாலாவை ஆட்டோவில் ஏற்றி அந்த வழியாக அழைத்துச் சென்றுள்ளார்கள் அவரது உறவினர்கள். பாலாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. இதனால் நீண்ட நேரம் ரயில்வே கேட்டில் ஆட்டோவிலேயே பாலா துடிதுடித்துக் கொண்டிருக்கிறார்கள்
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்த பாலாவின் உறவினர்கள், உடனடியாக பாலாவை தூக்கிக் கொண்டு ரயில்வே தண்டவாளத்தை கடந்து விடலாம் என்று அவர்கள் முடிவு செய்தார்கள். இதன்படி ரயில்வே கேட்டில் அணிவகுத்த வாகனங்களுக்கு மத்தியில் நெரிசலுக்கிடையே 4 பேர் பாலாவின் கை, கால்களை பிடித்துக்கொண்டு விரைந்து தூக்கிச் சென்றார்கள்.
நோயாளி பாலாவை தூக்கிக்கொண்டு அவரது உறவினர்கள் தண்டவாளத்தை கடந்து சென்றதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்தார்.. அந்த வீடியோ தான் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.. இதனிடையே பாலாவை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் உறவினர்கள் கதறி அழுதனர்.. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக ஆஸ்பத்திரிக்கு சென்றதால் பாலாவின் உயிரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்று அவரது உறவினர்கள் வேதனையுடன் கூறினார்கள்..
சிங்கபெருமாள் கோவில் ரெயில்வே கேட்டை கடந்து தினமும் பல ரெயில்கள் செல்வதால் அந்த கேட் அடிக்கடி மூடப்படும் நிலையில் அப்பகுதியில் நடைபெறும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்..
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications