சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இறுதி அஞ்சலிக்குப் போன போது விபத்தில் சிக்கிய குடும்பம்.. காப்பாற்றிய நபர் பரிதாப மரணம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    விபத்தில் உயிரிழந்த உறவினர்களின் இறுதி அஞ்சலிக்கு வந்தவர் மற்றொரு விபத்தில் சிக்கி பலி-வீடியோ

    சென்னை: சென்னையில் விபத்தில் உயிரிழந்த உறவினர்களின் இறுதி அஞ்சலிக்கு வந்தவர் மற்றொரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தனது உயிரை துச்சமென மதித்து தனது குடும்பத்தினரை காப்பாற்றி விட்டு அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

    சென்னை திருமங்கலம் திருநகரைச் சேர்ந்த மீரான் மொய்தீன் என்பவர் குடும்பத்தினருடன் மதுராந்தகம் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது கார் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் மீரான் மொய்தீனும் அவரது சகோதரி மகள் யாஸ்மினும் உயிரிழந்தனர். அவர்களின் இறுதிச் சடங்குகள் சென்னை திருநகரில் உள்ள மீரான் மொய்தீன் வீட்டில் நடைபெற்று வருகின்றன.

    சாலையோரம்

    சாலையோரம்

    இதில் பங்கேற்பதற்காக மீரான் மொய்தீனின் உறவினரான திண்டுக்கல்லைச் சேர்ந்த உபயதுல்லா என்பவர் குடும்பத்தினருடன் பஸ் மூலம் சென்னை வந்தார். அவர்கள் மீரான் மொய்தீன் வீட்டுக்குச் செல்வதற்காக இன்று அதிகாலையில் திருமங்கலத்தில் சாலையோரமாக சென்று கொண்டிருந்தனர்.

    வேறு புறம்

    வேறு புறம்

    அப்போது அங்கு அபாயகரமான வேகத்தில் வந்த ஒரு சொகுசுக் காரின் ஓட்டுநர், திருமங்கலம் சிக்னல் அருகே எதிரே உள்ள சாலையில் இருந்து திரும்பிய கார் மீது மோதாமல் தவிர்க்க சொகுசு காரை வேறுபுறம் திருப்பினார்.

    பலி

    பலி

    அப்போது கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோரமாகச் சென்றுகொண்டிருந்த உபயதுல்லா குடும்பத்தினரை நோக்கிப் பாய்ந்தது. அப்போது குடும்பத்தினர் அனைவரையும் எச்சரித்தும் பிடித்துத் தள்ளியும் காப்பாற்றிய உபயதுல்லா, தான் தப்பிக்க அவகாசம் இன்றி கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    டிரைவர்

    டிரைவர்

    இதனைத் தொடர்ந்து அந்த சொகுசு கார் அந்த இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கல் உள்ளிட்டவற்றில் மோதி நின்றது. இந்த விபத்தில் சொகுசுக் காரின் ஓட்டுநரான சதீஷின் வலது கால் எலும்பு முறிந்தது.

    மதுபோதை

    மதுபோதை

    விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் திருமங்கலம் போக்குவரத்துப் போலீசார் விபத்தை ஏற்படுத்திய சதீஷ் நினைவு திரும்பிய பின் மது அருந்தியிருந்தாரா என விசாரணை மேற்கொண்டனர்.

    English summary
    A man who saves his family from accident in Chennai Tirumangalam, died in that accident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X