ஆஹா.. கொரோனா வந்தாலும் வந்துச்சு.. இப்ப எல்லா அனிமல்ஸும் நம்மளைப் பார்த்து டர்ன் பண்ணி சிரிக்குமே!
சென்னை: இந்த கொரோனா வந்தாலும் வந்திச்சு, நம்மை பார்த்து விலங்குகள் எல்லாம் கேலி செய்து சிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுக்க பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது ஒரு தொற்று நோய் என்பதால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவில் கடந்த 3 மாதங்களாக லாக்டவுன் இருந்த நிலையில் நேற்று முதல் லாக் டவுன் நீக்கப்பட்டது. இந்தியா, அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை. இந்த நிலையில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப நாசா உள்ளிட்ட விண்வெளி ஆய்வு மையங்கள் ஆராய்ந்து வருகின்றன. இந்த ஆண்டு ஜூலை மாதம் ரோவரை நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பவுள்ளது.
அது 2021-ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தை அடையும். அது போல் 2039ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் ஒரு மீம் வைரலாகி வருகிறது.
Recommended Video
அதில் 3 மனிதக் குரங்குகள் சிரிக்கின்றன. என்ன சொல்லித் தெரியுமா? இந்த மனிதர்கள் 2020 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் தடம் பதிக்க போகிறார்களாம். அவர்களை பாருங்கள்!, வீட்டை விட்டே வெளியே வரமுடியாத நிலையில் உள்ளார்கள் என்று கூறி சிரிக்கின்றன.