இரு சக்கர வாகனத்தை ரோந்து காவலர் அடித்து உதைக்கும் காட்சி.. சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ!
Recommended Video
சென்னை: சென்னை போர் நினைவுச் சின்னம் அருகில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது ரோந்து காவலர் ஒருவர் கம்பால் அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் போர் நினைவுச்சின்னம் அருகே சாலையோரமாக ஒரு இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு வந்த காவலர் ஒருவர் அந்த வாகனத்தை லத்தியை கொண்டு அடிக்கிறார்.
உடன் உதவி ஆய்வாளரும் இருக்கிறார். தொடர்ந்து உரிமையாளர் ஓடி வந்து வாகனத்தை எடுத்து செல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆனால் காவலர் வாகனத்தை சேதப்படுத்தியதற்கு அந்த நபர் எதையும் சொல்லவில்லை.
இதுகுறித்து அந்த காவலரிடம் கேட்டபோது வாகனத்தை ஓட்டி வந்தது கல்லூரி மாணவர், அந்த பகுதியில் கஞ்சா ஏதும் கிடைக்குமா என சுற்றிக் கொண்டிருக்கிறார். பல முறை கண்டித்தும் கேட்கவில்லை. ரோந்து சென்றுவிட்டு திரும்பிய போதும் அந்த வாகனம் அதே இடத்தில் இருந்ததால் அடித்து நொறுக்கினேன்.