அட அப்ரண்டீசுகளா.. இப்டி கெக்கேபிக்கேனு சிரிச்சுக்கிட்டே ப்ரே பண்ணினா நேசமணி எப்டி பிழைப்பாரு?
Recommended Video
சென்னை: நேசமணி தான் இப்போது இந்தியா முழுவதும் டாக் ஆப் தி டவுன். யார், என்ன, ஏது என்ன தெரியாமல் பலர் குழம்பிக் கொண்டிருக்க, விசயம் தெரிந்த நம்மவர்கள் நேசமணியை வச்சு செய்து வருகிறார்கள்.
எங்கோ எப்டியோ pray for nesamani தோன்றி எப்படியோ வைரலாகி விட்டது. நம்மவர்களும் அதனை விடாமல் பிடித்துக் கொண்டு, மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர். சில கம்பெனிகள் இது தான் சாக்கு என நேசமணியை வைத்து தங்களது வியாபாரத்திற்கு விளம்பரம் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், அலுவலகம் ஒன்றில் நேசமணிக்காக ஊழியர்கள் அனைவரும் எழுந்து நின்று பிரார்த்தனை செய்கின்றனர். அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.
ஆனால், இந்த வீடியோவில் உள்ளோர் சிரித்துக் கொண்டே எழுந்து நின்று, பிரார்த்தனை செய்கின்றனர். இதனைப் பார்த்து கடுப்பான நேசமணி நலம் விரும்பிகள், இந்த வீடியோவுடன், 'இப்டி சிரிச்சுக்கிட்டே பிரார்த்தனை பண்ணினா நேசமணி எப்டி பிழைப்பார். கொஞ்சம் சீரியசா பண்ணுங்க பாஸ்' என கோபமாக தெரிவித்துள்ளனர்.
இதோ உங்களுக்காக அந்த வீடியோ...