சென்னை ராயபுரத்தில் சாலையில் 10 அடிக்கு திடீர் பள்ளம்.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சென்னை: சென்னை ராயபுரம் சூரிய நாராயண சாலையில் சாலையில் திடீரென்று 10 அடியில் பள்ளம் ஏற்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் அவ்வப்போது சில இடங்களில் திடீரென 10 அடி அல்லது 15 அடி திடீர் திடீரென பள்ளம் ஏற்படுகிறது. சில மாதங்களுக்கு சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் தூதரகத்தை ஒட்டி பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் பேருந்து ஒன்று சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. கடந்த 3 வாரத்திற்கு முன்பு சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பு சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
இந்நிலையில் இன்று மாலை சென்னை ராயபுரம் சூரிய நாராயண சாலையில் சாலையில் திடீரென்று 10 அடியில் பள்ளம் ஏற்பட்டது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட கழிவு நீர் வழிதடத்தில் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். பள்ளத்தை மூடுவது தொடர்பாக மாநகராட்சி குடிநீர் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து பள்ளத்தை மூடுவது தொடர்பான பணிகளை மேற்கொண்டனர். ஜேசிபி இயந்திரம் மூலமாக பள்ளத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றது.