கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்.. நடிகர் அமிதாப் பச்சன் உருக்கம்
'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டும் என, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை: 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டும் என, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, நடிகர் அமிதாப் பச்சன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வீடியோ வாயிலாக நடிகர் அமிதாப் பச்சன் கூறியதாவது, கடந்த நவம்பர் 15 ஆம் தேதி ஏற்பட்ட 'கஜா' புயல் தமிழகம், புதுச்சேரியில் பெரும் அழிவை விட்டுச் சென்றுள்ளது.
ஒரே தேசம் ஒரே மக்கள் என்பதே இந்தியாவின் பலம். 'கஜா'வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி பலரும் அறிந்திருக்கவில்லை. ஆனால், சகோதரத்துவத்தை உணர்த்துவதற்கு இதுவே சரியான நேரம்.
Thank you Amit ji @SrBachchan. You have clearly explained the devastation the Gaja Cyclone has wrecked in Thamizh Nadu. It is always people like you who have been the thread which stitches our country together in spite of all its diversity. pic.twitter.com/3EEWhnWXAK
— Kamal Haasan (@ikamalhaasan) December 5, 2018
இதில் 3.7 லட்சம் பேர் தங்கி இருந்த வீட்டை இழந்துள்ளனர். 3.4 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. 50 முதல் 80 சதவீதம் வரை தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். போக்குவரத்து தடை, மின்கம்பங்கள் சேதம் என இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. உணவு உற்பத்தி செய்யும் அப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள விவசாய அழிவுகள் கற்பனைகளுக்கு மிஞ்சியது.
அரசு உதவிகளை தாண்டி, தன்னார்வலர்கள், சமூக நல இயக்கங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் பெரும் அளவில் பங்காற்றியுள்ளனர். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் களத்தில் நின்று வேலை செய்கிறார்கள். 'கஜா' பாதிப்புகளிலிருந்து மக்கள் மீளுவதற்கு உதவிகரம் நீட்டுங்கள், நன்றி என கூறியுள்ளார்.
இது தொடர்பாக, கமல்ஹாசன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், நன்றி, அமிதாப் பச்சன். கஜா புயல் தாக்குதலால் தமிழ்நாட்டில் அழிந்து போன பேரழிவுகளை நீங்கள் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். வேற்றுமைகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைவதற்கு உங்களைப் போன்றவர்கள் நூலாக செயல்படுகிறீர்கள் என பதிவிட்டுள்ளார்