தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா உறுதி.. அறிகுறி இல்லாவிட்டாலும் தனிமை!
சென்னை: தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பொதுமக்களுடன் தொடர்பில் இருக்கும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வோர் என ஒருவர் விடாமல் கொரோனா தொற்று ஏற்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா உறுதியானதாக அவரது பிஆர்ஓ தெரிவித்துள்ளார். ஆச்சார்யா திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொள்ள அரசு நடைமுறைகளின் படி சிரஞ்சீவிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
அப்போது அவருக்கு அறிகுறி இல்லாத நிலையிலும் கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
மேலும் தன்னை கடந்த 5 நாட்களில் சந்தித்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தான் முழுமையாக குணமடைந்த பின்னர் தகவல் தெரிவிப்பதாகவும் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
Comments
English summary
Actor Chiranjeevi has tested Corona positive and he is asymptomatic.
Story first published: Monday, November 9, 2020, 11:20 [IST]