நல்ல ஒரு மேடையில் நியாயமான குரல்.. சுபஸ்ரீ மரணம் குறித்த பேசிய விஜய்க்கு கமல் பாராட்டு
Recommended Video
சென்னை: சுபஸ்ரீ மரணம் குறித்து நடிகர் விஜய் கருத்து தெரிவித்த நிலையில், நல்ல ஒரு மேடையை நியாயமான குரல் கொடுப்பதற்காக பயன்படுத்தி இருப்பதாக நடிகர் விஜய்க்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததால் தவறி விழுந்த சுபஸ்ரீ லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் சுபஸ்ரீயின் மரணம் குறித்து பிகில் இசை வெளியிட்டு விழாவில் கருத்து தெரிவித்த நடிகர் விஜய், சுபஸ்ரீ மரணத்தில் யார் மீது கோவப்பட வேண்டுமோ அவர்கள் மீது கோவப்படாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர் மீதும் பழிபோடுகிறாங்க என குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் சுபஸ்ரீ விவாகரத்துக்காக ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டால் நன்றாக இருக்கும் இருக்கும் என்றும் சமூக வலைத்தளங்களில் நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையியில் சுபஸ்ரீ மரணம் குறித்து குரல் கொடுத்து நடிகர் விஜய் பேசியதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஹேப்பி.. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் நீர் மட்டம் கிடுகிடு.. பூண்டி ஏரி ஒரே நாளில் 7 அடி உயர்வு
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன், யாரை கைது செய்ய வேண்டுமோ அவரை விட்டுவிட்டு, பேனர் பிரிண்ட் செய்த கடைக்காரரை கைது செய்கிறார்கள் என நடிகர் விஜய் பேசியது வரவேற்புக்குரியது. நல்ல ஒரு மேடையை நியாயமான குரல் கொடுப்பதற்காக பயன்படுத்தி உள்ளார். தம்பிக்கு விஜய்க்கு வாழ்த்துக்கள் என்றார்.