குளம் போல் தேங்கிய மழைநீரில் பாத் டப்பை படகாக்கி மன்சூர் அலிகான் பயணம்.. பாட்டு பாடும் வீடியோ வைரல்
சென்னை: சென்னையில் மழையால் குளம் போல் தேங்கியுள்ள மழைநீரில் நடிகர் மன்சூர் அலிகான் பாட்டுப் பாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றம் புறநகர்ப் பகுதியில் இரு தினங்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
கோவை அருகே ரயில் மோதி 3 யானைகள் பலி... ரயில் எஞ்சின் பறிமுதல், ஓட்டுநரிடம் வனத்துறை விசாரணை
வங்கக் கடலில் காற்றின் உந்துதல் குறைந்த அழுத்தம் காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது.
நுங்கம்பாக்கம்
எனினும் காற்று சுழன்று வருவதால் விட்டு விட்டு மழை பெய்யும் என சொல்லப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை சென்னையில் வெளுத்து வாங்கியது. இதனால் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சர்தர் படேல் சாலை, ஆளுநர் மாளிகை உள்ளிட்ட இடங்களில் நிறைய தண்ணீர் தேங்கியுள்ளது.
கூடுவாஞ்சேரி
அது போல் வேளச்சேரி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் கழுத்தளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். தண்ணீர் அதிகம் உள்ள இடங்களில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் எழுந்துள்ளது.
மன்சூர் வீடு
இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் வீடு அமைந்துள்ள பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதில் பாத் டப்பில் மன்சூர் அலிகான் கப்பல் ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. "பொறந்தா தமிழ்நாட்டுல பொறக்கணும்.. சென்னை தண்ணியில மிதக்கணும்.. தமிழனாக பிறக்கணும் சென்னையில் கார் ஓட்டி மகிழனும் என பாட்டு பாடினார்.
வெள்ளம்
கடந்த ஆண்டு நிவர் புயலின் போதும் நடிகர் மன்சூர் அலிகான் வசிக்கும் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அவர் ஒரு பாத் டப்பை எடுத்துக் கொண்டு துடுப்பையும் வைத்து ஜெகமே தந்திரத்தில் வரும் ரகிட ரகிட பாடலை பாடி படகு பயணம் மேற்கொண்டார். அவர் ரகிட ரகிட பாடலின் வரிகளில் மக்கள் நலன் சார்ந்த வரிகளை போட்டு பாடினார். ஆ ரகிட ரகிட ரகிட என என்னவேணா நடக்கட்டும், நாம சந்தோஷமா வாழனும். ஆட்சியாளர்கள் மக்களைத்தான் சந்தோஷமா வைக்கணும்.. ரகிட ரகிட... ரகிட என்னவேணா நடக்கட்டும், நாம சந்தோஷமா வாழனும், ஆள்றவங்க மக்களை சந்தோஷமா வைக்கணும் .. ரகிட ரகிட.. ரகிட மீனவங்க வாழ்க்கையை கொஞ்சம் வாழத்தானே வைக்கணும்.. ரகிட ரகிட.... என பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.