சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Radha Ravi: ஒன்றா இரண்டா.. எத்தனை மட்ட ரக பேச்சுக்கள்.. ராதா ரவியை துரத்தம் சர்ச்சை

Google Oneindia Tamil News

Recommended Video

    Radha Ravi Insults Nayanthara : நயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி-வீடியோ

    சென்னை: நடிகர் ராதா ரவிக்கும் சர்ச்சை பேச்சுக்களுக்கும் முடிவே கிடையாது. 'அவள் ஒரு தொடர் கதை' என்ற தலைப்பு இவருக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்னும் அளவுக்கு சர்ச்சை நாயகனாகவே மாறியுள்ளார்.

    அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து திமுகவில் சேர்ந்தவர் நடிகர் ராதா ரவி. ஆனால், இன்னும் இவர் அதிமுக ஸ்லீப்பர் செல்தானோ என சந்தேகப்படும்படியாக சர்ச்சை பேச்சுக்களை அவிழ்த்துவிட்டு வருகிறார்.

    திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோது, மாற்றுத்திறனாளி குழந்தைகளை மிகவும் புண்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டார்.

    தேர்தலில் போட்டியில்லை.. கமல் அறிவிப்பு.. வெளியானது மநீம கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் லிஸ்ட்!தேர்தலில் போட்டியில்லை.. கமல் அறிவிப்பு.. வெளியானது மநீம கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் லிஸ்ட்!

    ராதாரவி மோசமான பேச்சு

    ராதாரவி மோசமான பேச்சு

    ஊனம் என்ற வார்த்தையை கூட பயன்படுத்தவிடாமல் மாற்று திறனாளிகள் என்று மாற்றி பயன்படுத்தும் இந்த நவீன யுகத்தில் ராதா ரவியின் பேச்சு பெரும், அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தப் பொதுக் கூட்டத்தில் பேசிய ராதா ரவி, திமுகவினரை எதிர்க்கும் அரசியல்வாதிகளான அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரை, சப்பாணி என கூறி அழைத்தார். மேலும், கைகளை கோணிக்கொண்டு, அந்த குழந்தைகள் படும்பாட்டை கிண்டல் செய்து காண்பித்தார். ராதா ரவியின் இந்த செயல்பாடு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியும் கண்டனம் தெரிவித்திருந்தார். மாற்றுத்திறனாளிகள் ஆதரவு அமைப்பு காவல் நிலையத்தில் ராதாரவிக்கு எதிராக புகார் அளித்தது.

    சர்ச்சை தொடர்கதை

    சர்ச்சை தொடர்கதை

    நாய் என்பதை நாய் என்றுதான் கூற முடியும். ஆங்கிலத்தில் டாக் என அழைத்தால் அது நல்ல வார்த்தையாகிவிடும். தமிழில் நாய் என்று அழைத்தால் அதற்காக தகராறு செய்வார்களா என்று அதற்கு மோசமாக ஒரு சப்பைகட்டும் கட்டினார், ராதாரவி. இந்த நிலையில், மீண்டும், மீண்டும், சர்ச்சையை நிறுத்தவில்லை அவர்.

    மீ டூ சர்ச்சை

    மீ டூ சர்ச்சை

    சென்னையில் நடந்த ‘அவதார வேட்டை' என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ராதாரவி கலந்து கொண்டு பேசும் போது ‘மீ டூ' குறித்து கருத்து தெரிவித்து மோசமாக பேசினார். சினிமா துறையில் ‘மீ டூ' பற்றி பேசப்பட்டு வருகிறது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். ஆனால் கூத்தாடி இரண்டுபட்டால் அது ஊருக்கே கொண்டாட்டம். எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தை 4 நாட்கள்தான் பரபரப்பாக பேசினார்கள். அதுபோல் ‘மீ டூ' வும் சில நாட்களில் காணாமல் போய் விடும் என்று அலட்சியப்படுத்தினார்.

    கோபமோ கோபம்

    கோபமோ கோபம்

    மற்றொரு நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினி, ராதா ரவி பேசுவார் என பெயர் சொல்லி அழைத்ததற்கு வந்ததே பார்க்கலாம் கோபம். எனது பெயரை சொல்லி கூப்பிடும் அளவுக்கு தகுதியுள்ளதா உனக்கு என சரமாரியாக பொரிந்து தள்ளிவிட்டார். பாவம் அந்த பெண். மேடையில் நெளிந்தார். மேலும் பெரும்பாலான மேடைகளில் அரசியல் தலைவர்களையும், கலைஞர்களையும், ஒருமையில் அழைத்து முகம் சுளிக்க வைப்பது ராதா ரவி வாடிக்கையாக இருந்து வருகிறது.

    தொடர் கதை

    தொடர் கதை

    இப்போது லேட்டஸ்ட்டாக, நயன்தாரா குறித்து மோசமான கருத்துக்களை கூறியுள்ளார். இதற்காக திமுகவிலிருந்து இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். எனவே ஒரு வழியாக நயன்தாராவிடம் வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். ஆனால், தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும், கூறியுள்ளார். எனவே ராதா ரவி அவ்வளவு எளிதில் தனது நாவிற்கு கடிவாளம் போட மாட்டார் என்றுதான் தெரிகிறது.

    English summary
    Actor Radha Ravi's controversial speech is continues from very long time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X