சென்னையில் எடப்பாடி பழனிசாமியுடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு… என்ன காரணம் தெரியுமா?
சென்னை:சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் ரஜினி காந்த் திடீரென சந்தித்து பேசியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவிற்கும், தொழிலதிபர் வணங்காமுடி மகன் விசாகனுக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது. அந்த திருமணம் சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெறுகிறது.
முன்னதாக நிச்சயதார்த்தம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை ராக வேந்திரா மண்டபத்தில் கடந்த 8ம் தேதி நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் அதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு நடிகர் ரஜினி இன்று காலை சென்றார். அப்போது தனது மகள் திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்து, அழைப்பிதழை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மகள் சவுந்தர்யா திருமணத்துக்கான அழைப்பிதழை நான் வழங்கினேன். திருமணத்திற்கு நிச்சயம் வருவதாக அவர் உறுதி அளித்தார் என்று கூறினார்.