சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மின்சார கட்டணம் குறித்து மக்களுக்கு அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.. சரத்குமார் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: மின்சார கட்டணம் தொடர்பாக மக்களுக்கு அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்
எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Actor Sarathkumar says that State government has to clarify about the EB bill

தற்போது உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா நோயிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இந்த 2020-ஆம் ஆண்டை நாம் கடுமையாக போராடி கடக்க வேண்டும்.

தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. அவர்களுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சிகள் குறை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கொரோனாவிற்க்கு சிகிச்சை சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது.

ஆங்கில மருத்துவத்திற்கு நாம் எவ்வளவு முன்னுரிமை கொடுக்கிறோமோ அதே போல் சித்த மருத்துவத்திற்கும் நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஏனென்றால் அந்த வைத்தியங்கள் அனைத்தும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு வைத்தியமாகும்.

ஊரடங்கு காலகட்டத்தில் அனைவரும் வீட்டில் இருப்பது என்பது சாதாரண காரியங்கள் இல்லை. ஆனால் நாம் அனைவரும் வீட்டில் விழிப்புடன் இருப்பதே நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவும். அதேபோல் பல்வேறு பிரச்சினைகள் அதாவது மன உளைச்சல்கள் பொருளாதாரச் சிக்கல்கள் என பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன.

அமெரிக்காவும் சீனாவும் டேஞ்சரான பகுதியில் நுழைகிறார்கள்! நிபுணர்கள் எச்சரிக்கை!

இதிலிருந்து நாம் மீள வேண்டும் என நான் கடவுளை பிரார்த்திக்கிறேன். மேலும் கொரோனாவிற்கு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அது கூடிய விரைவில் வெற்றி அடைய செய்து விரைவில் நம் குழுவில் இருந்து மீள வேண்டும்.

கருப்பர் கூட்டம் தொடர்பாக நான் சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தேன். தற்போதும் நான் கூறுகிறேன். அது என்னவென்றால் இதுபோன்ற சம்பவங்களை வெளியிடும் சமூக வலைதளங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் யாராக இருந்தாலும் மற்ற மதத்தினரையோ அவர்களை சார்ந்தவர்களையோ துன்புறுத்தக் கூடாது அப்படி மீறும்பட்சத்தில் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

கொரோனா தடுப்புப் பணியில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதே போல் பல்வேறு தன்னார்வலர்களும் அரசியல் கட்சிகளும் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வந்தார்கள் அவர்களோடு சேர்ந்து சமத்துவ மக்கள் கட்சியும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. மேலும் மின்சார கட்டணம் தொடர்பாக மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

English summary
Actor Sarathkumar says that Government has to clarify about the EB bills.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X