நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல்.. சென்னை மருத்துவமனையில் அனுமதி
சென்னை: பருத்தி வீரன், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் சென்னையில் உள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலால் பலர் அவதியடைந்து வருகின்றனர். இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மர்ம காய்ச்சல் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் சேலத்தைச் சேர்ந்த நடிகர் சரவணனுக்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சல் இருப்பதாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
[2ஆவது மாடி பால்கனியில் வேடிக்கை பார்த்த பரத்!.. இடைவெளிக்கு விழுந்த பரிதாபம்.. பின்னர் நடந்தது என்ன?]
தனியார் மருத்துவமனையில்
அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக இன்று காலை சென்னைக்கு அழைத்து வரப்பட்ட சரவணன் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ப்ளூ காய்ச்சல்
இதுகுறித்து சரவணன் கூறுகையில், தீபாவளி பண்டிகை அன்று எனக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து சேலம் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது பன்றிக் காய்ச்சலின் முதல்கட்ட பாதிப்பான ப்ளூ காய்ச்சல் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
தொடர்ந்து நடிப்பேன்
தற்போது காய்ச்சல் குறைந்த நிலையில் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன். விரைவில் பூரண குணமடைந்து தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்றார் சரவணன்.
கடைக்குட்டி சிங்கம்
90-களில் சில படங்களில் ஹீரோவாக நடித்து வந்த சரவணன், அதன் பின்னர் நடிகர் கார்த்தி நடித்த பருத்தி வீரன் படம் மூலம் மறுபடியும் படங்களில் நடித்தார். இவர் கார்த்தி நடித்துள்ள கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்துள்ளார்.