நுங்கம்பாக்கத்தில் வாக்களிக்க வந்த சத்யராஜ்.. வரிசை தெரியாமல் நீண்ட நேரம் குழப்பம்
Recommended Video
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு மனைவியுடன் வாக்களிக்க வந்த நடிகர் சத்யராஜ், வரிசை தெரியாமல் நீண்ட நேரம் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் வேலுரைத் தவிர 38 மக்களவை தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவை தொகுதிக்கும் இன்று மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதேபோல் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கும் நடந்து வரும் இடைத்தேர்தலில் மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருகிறார்கள்.
ரஜினி, கமல், விஜய்,அஜித், விஜய் சேதுபதி, திரிஷா என திரை உலகினர் பலரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள்.
11 மணி நேரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக ஆரணியில் விறுவிறு வாக்குப் பதிவு
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் மனைவியுடன் நடிகர் சத்யராஜ் வாக்களிக்க சென்றார். அப்போது அவர் வரிசை தெரியாமல் நீண்ட நேரம் காத்திருந்தார்.
மேலும் பச்சைக்குழந்தைகளுடன் வாக்களிக்க வந்தவர்களுடன் சத்யராஜ் நீண்ட வரிசையில் காத்திருந்தார். இதன்பின்னர் வாக்களித்த அவர் மனைவியுடன் தனது இல்லத்துக்கு புறப்பட்டு சென்றார்.