பெரியாரின் பேத்தியே மகிழ்ச்சி... கவுசல்யாவுக்கு சத்யராஜ் வாழ்த்து!
கவுசல்யா திருமணத்திற்கு நடிகர் சத்யராஜ் வாழ்த்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: மறுமணம் செய்துகொண்ட உடுமலை கவுசல்யாவுக்கும் சக்திக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் நடிகர் சத்யராஜ்.
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கவுசல்யா, பறை இசைக் கலைஞர் சக்தியை மறுமணம் செய்து கொண்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கவுசல்யா-சக்தி தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சத்யராஜூம், புதுமண தம்பதிக்கு தனது வாழ்த்தை கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் சத்யராஜ் பேசி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சத்யராஜ் சொன்னதாவது:
"பெரியாரின் பேரன் பேத்தி, தோழர் கவுசல்யாவுக்கும் பறையடித்து பகுத்தறிவைப் பரப்பும் பாசமுள்ள தோழன் சக்திக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
சலிப்பும் ஓய்வும் ஒரு சமூகப் போராளிக்கு தற்கொலைக்குச் சமம் - தந்தை பெரியார்
கற்பி; ஒன்று சேர்; புரட்சி செய் - அண்ணல் அம்பேத்கர்
பயத்தை விடு. இல்லையென்றால், லட்சியத்தை விடு - தலைவர் பிரபாகரன்.
இந்த மூன்று போராளிகளின் வீரத்தை, லட்சியத்தை மனதிலேன்றி, செயல்படும் தோழர் சக்திக்கும் தோழர் கவுசல்யாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று வாழ்த்து வீடியோவை சத்யராஜ் வெளியிட்டுள்ளார்.