'ஒருவிரல் புரட்சியை நிகழ்த்திய விஜய்'... சென்னை அடையாறில் மக்களுடன் வரிசையில் நின்று வாக்களிப்பு
Recommended Video
சென்னை: சென்னையில் நடிகர் விஜய் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார்.
தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் 39 தொகுதிகளுக்கு (வேலூரை தவிர) இன்று மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதேபோல் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்து வருகிறது.
இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள்.
நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் சென்னை திருவான்மியூரில் உள்ள சென்னை தொடக்க பள்ளிக்கு சென்று வாக்களித்தார். இதேபோல் நடிகர் ரஜினி காந்த் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லி மேரிஸ் கல்லூரியில் ஆர்வமுடன் வாக்களித்தார்.
லோக்சபா தேர்தலில் வாக்களிக்க சென்ற 2 முதியவர்கள் பலி.. சேலம், ஈரோட்டில் அதிர்ச்சி!
இதேபோல் நடிகர் விஜய் காலை 7.30 அளவில் சென்னை அடையாறு காமராஜனர் அவென்யூவில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்தார். அப்போது வாக்களிப்பதற்காக மக்களோடு மக்களாக வரிசையில் நின்றார்.
பின்னர் வாக்கச்சாவடிக்குள் சென்று வாக்களித்துவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். அப்போது ரசிகர்கள் அவரை பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.