விஷாலுக்கும் "அவருக்கும்" தொடர்பு.. புகார் கூறிய பெண் மீது பாய்ந்தது போக்சோ!
நடிகர் விஷால் மீது புகார் கூறிய பெண் மீது போஸ்கோ பாய்ந்தது.
Recommended Video
சென்னை: நடிகர் விஷால் மீது பாலியல் புகார் சொல்லி வீடியோ வெளியிட்ட விஸ்வதர்ஷினி மீது ராயப்பேட்டை மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விஸ்வதர்ஷினி என்ற பெண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில், "கோபாலபுரத்தில் ஒரு அபார்ட்மெண்ட்டில் 4-வது மாடிக்கு நடுராத்திரி 2 மணிக்கு விஷால் வந்துவிட்டு, பிறகு பின்வாசல் வழியாக அதிகாலை 4 மணிக்கு சுவர் ஏறி குதித்து ஓடினார்.
பின்வாசல் வழியாக விஷால் ஓடியது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார். அது மட்டும் இல்லாமல் விஷால் செய்த அட்டகாசங்கள் நிறைய உள்ளன. அவை எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. சிசிஎல் கிரிக்கெட் போட்டியின்போது அவர் எப்படியெல்லாம் ஆட்டம் போட்டார் என்பதற்கான ஆதாரமும் என்னிடம் இருக்கிறது என்றும் கூறி இருந்தார்.
ஓரின சேர்க்கை
விஷால் மீதே இப்படி ஒரு குற்றச்சாட்டை திரையுலகம் உள்ளிட்ட யாருமே எதிர்பார்க்கவே இல்லைதான். ஆனால் இந்த பெண் இதுபோல சர்ச்சையான புகாரைக் கூறுவது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 16 வயது சிறுமி தன்னிடம் ஓரினச் சேர்க்கைக்கு முயற்சித்ததாக புகார் கூறி சலசலப்பையும் ஏற்படுத்தினார்.
குழந்தைகள் நல ஆணையம்
இப்படி தன் மீது பாலியல் ரீதியான புகார் சொல்லவும் சிறுமி நேராக விஷ்வதர்ஷினி மீது தேசிய குழந்தைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். ஆனால் பாலியல் ரீதியாக தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக அந்த வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுமி சார்பில் தேசிய குழந்தைகள் நல ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டது.
16 வயது சிறுமி
அதன் அடிப்படையில்தான் காவல் ஆணையர் உத்தரவின்பேரில் புகார் சொல்லப்பட்ட 16 வயது சிறுமியிடம் ராயப்பேட்டை மகளிர் போலீஸ் அவரிடம் வாக்கு மூலம் பெற்று விசாரணை நடத்தியதில் புகார் உண்மை என தெரியவந்தது.
விரைவில் கைது?
இதையடுத்து ராயப்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் விஸ்வதர்ஷினி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே விஸ்வதர்ஷினி எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.