கடைசியில கரு பழனியப்பன் திமுகவா.... நான் கூட சிவப்பு சிந்தனையாளர்-னு நினைச்சேன்.. கஸ்தூரி கிண்டல்
கரு பழனியப்பனை ட்வீட் போட்டு விமர்சனம் செய்துள்ளார் நடிகை கஸ்தூரி
Recommended Video
சென்னை: "கடைசியில கரு பழனியப்பன் திமுகவா.... நான் கூட சிவப்பு சிந்தனையாளர்-னு நினைச்சேன்" என்று நடிகை கஸ்தூரி ட்வீட் ஒன்றினை பதிவிட, அது இப்போது இணையத்தில் றெக்கை கட்டி வேகமாக பறந்து வருகிறது.
நாட்டு நடப்புகளை உன்னிப்பாக கவனித்தும், அது சம்பந்தமாக கருத்தை பதிவிட்டும் வருபவர் நடிகை கஸ்தூரி. இதில் சில நியாயமாகவும் இருக்கும், மேலும் சில கருத்துக்கள் நெட்டிசன்களிடம் வாங்கிக்கட்டிக் கொள்வதைபோலவும் இருக்கும். இதனால் இவரது ட்வீட்டிற்கு சபாஷூம், கழுவி கழுவி ஊற்றுவதும் என அடிக்கடி நடக்கும்.
இந்நிலையில், இயக்குனர் கரு.பழனியப்பனை கலாய்த்து ஒரு ட்வீட் போட்டுள்ளார். கரு.பழனியப்பன் சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர். இவர் ஒரு டைரக்டர் என்பதை விட சமூக ஆர்வலராகவே அதிகம் அறியப்பட்டவர். மக்களின் அடித்தள பிரச்சனைகள் குறித்து டிவி விவாதங்களை நடத்தி வருபவர்.
EXCLUSIVE: 20 வருடமாக.. பரமக்குடி சண்முகவள்ளி கடையில் மட்டும் கூட்டம் கட்டி ஏறுவது ஏன்?
கரு பழனியப்பன்
குறிப்பாக கல்லூரி விழாக்களில் இளைஞர்களின் மத்தியில் இவரின் அனல் பறக்கும் பேச்சுக்கு கைதட்டல்கள் அள்ளும். இவரது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் கரு.பழனியப்பனின் பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்கள் எப்போதுமே மக்களை திசைதிருப்பி கொண்டு வரும்.
சு.வெங்கடேசன்
ஆனால் சில தினங்களாக சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் மோடிக்கு எதிராகவும் முதல்வருக்கு எதிராகவும் பேசிய பேச்சுக்கள் அப்ளாஸ்களை அள்ளி கொண்டு சென்றது.
உங்கள் லோக்சபா தொகுதி.. என்ன சிறப்பு தெரியுமா? சுவாரசிய தகவல்கள்!
|
கலாய் ட்வீட்
பிறகு திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார். கனிமொழியுடன் கரு.பழனியப்பன் பிரச்சாரத்தில் ஈடுபடுவது போன்ற போட்டோக்களை பார்த்ததும், அபிப்பிராயங்கள் மாற ஆரம்பித்தது. இதை தான் கஸ்தூரி கலாய்த்தே ட்வீட் போட்டுள்ளார்.
ப்ரோக்ராம் பார்சல்
"கடைசியில கரு பழனியப்பன் திமுகவா.... நான் கூட சிவப்பு சிந்தனையாளர், சு.வெ க்கு மட்டும் பிரச்சாரம் பண்ணுறாருனு முதல்ல நினைச்சேன்... ஆனா எல்லாருக்கும் பண்ணுறாரு போல.குடும்ப டிவில ஒரு ப்ரோக்ராம் பார்சல் ! என்று கூறி கிண்டலாக பதிவிட்டுள்ளார். வழக்கம்போல் கஸ்தூரியின் இந்த பதிவிற்கும் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன.