4 சீட்டுக்காக… இப்படியா மாத்தி, மாத்தி பேரம் பேசுவீங்க… பாமகவை சீண்டிய நடிகை கஸ்தூரி
சென்னை: 4 சீட்டுக்காக.... இப்படியா மாத்தி, மாத்தி பேரம் பேசறதா என்று பாமகவுக்கு நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் கூட்டணி அமைக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இறங்கி உள்ளன.அதிமுக, பாஜக ஓர் அணியாகவும், காங்கிரஸ், திமுக கூட்டணி மற்றொரு அணியாகவும் தேர்தலை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை எந்த கூட்டணியும் இன்னும் அறிவிக்கவில்லை.
இதற்கிடையே, அதிமுக அல்லது திமுக இரு கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி அமைக்க பாமக முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந் நிலையில், பாமகவின் அரசியல் நிலைப்பாட்டை கேலி செய்து நடிகை கஸ்தூரி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாமகவின் இரட்டை நிலைப்பாடு என்று ஒரு கருத்தை முன் வைத்து விமர்சித்து உள்ளார்.
PMK 4 சீட்டுக்கு இப்பிடி மாத்தி மாத்தி பேரம் பேசுறதுக்கு பேசாம அதிமுக திமுக ரெண்டு கட்சியோடயும் தலா 2 சீட்டு கூட்டணி வச்சி 🤦♀️புரட்சி பண்ணிரலாம்.
— Kasturi Shankar (@KasthuriShankar) February 17, 2019
திராவிட அரசியலுக்கு மாற்று, டாஸ்மாக் கட்சிகளுக்கு எதிர்ப்பு, மாற்றம் முன்னேற்றம் எல்லாம் என்ன ஆச்சு? 🥭
அதில், PMK 4 சீட்டுக்கு இப்பிடி மாத்தி மாத்தி பேரம் பேசுறதுக்கு பேசாம அதிமுக திமுக ரெண்டு கட்சியோடயும் தலா 2 சீட்டு கூட்டணி வச்சி புரட்சி பண்ணிரலாம். திராவிட அரசியலுக்கு மாற்று, டாஸ்மாக் கட்சிகளுக்கு எதிர்ப்பு, மாற்றம் முன்னேற்றம் எல்லாம் என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கஸ்தூரியின் இந்த பதிவை பார்த்து அதிர்ச்சியடைந்த பாமக தொண்டர்கள், எங்கள் கட்சி மீது திட்டமிட்டு பழி சுமத்தப்படுவதாகவும், பாமக ஒரு போதும் கலங்காது என்றும் பதில் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.