அவர்தான் அப்பவே சொன்னாரே.. கேட்டீங்களாய்யா.. விசனப்படும் கஸ்தூரி
Recommended Video
சென்னை: அவர்தான் அப்பவே சொன்னாரேப்பா.. கேட்டீங்களா என்று கேட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.
கஸ்தூரி யாரைச் சொல்கிறார். அவர் சொன்னவர் என்ன சொன்னார்.. வேறென்ன எல்லாம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பற்றித்தான் இந்த டிவீட்.
நேற்றுதான் இந்தியா பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியா போரா என்றுதான் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டிகள் எப்பவுமே சூடா இருக்கும். நேற்றும் கூட அப்படித்தான்.
பாக். தோல்வியை அரசியலாக அமித்ஷா கொண்டாடுவதா? சீறும் மூத்த பத்திரிகையாளர்!
உலக கோப்பை
குடிநீர்ப் பிரச்சினை, வறட்சி, மழையின்மை, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட அத்தனை பிரச்சினைகளையும் மறந்து விட்டு அல்லது ஓரம் கட்டி விட்டு அத்தனை பேரும் கிரிக்கெட்தான் பார்த்தனர். சும்மா சொல்லக் கூடாது, ரோஹித் சர்மாவும், மற்ற இந்திய வீரர்ளும் அதிரடியாக ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தி விட்டனர்.
இம்ரான்கான்
சரி அதை விடுவோம்.. இப்ப என்ன மேட்டர்னா.. இந்தியா தோற்றதை விட பாகிஸ்தான் தோல்விக்கான முக்கியக் காரணங்கள் படு சூடாக அலசப்படுகின்றன. அதில் முக்கியமானது, அந்த நாட்டு பிரதமரும், பாகிஸ்தானுக்கு உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்தவரும், தரமான பவுலராக வலம் வந்தவரும், முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் சொன்னதை, பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் கான் கேட்கவில்லை என்பதுதான் சர்ச்சையாகியுள்ளது.
சறுக்கிவிட்டது
இம்ரான் கான் என்ன அட்வைஸ் கொடுத்திருந்தார் என்றால், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்யுங்க என்று கூறியிருந்தார். ஆனால் சர்பிராஸ் கான் பவுலிங்கைத் தேர்ந்தெடுத்து விட்டார். அப்பவே முடிவாகி விட்டது தோல்வி. எதிர்பார்த்தது நடக்காமல் சறுக்கி விட்டது பாகிஸ்தான்.
|
கேட்கவில்லை
இதைத்தான் தனது டிவீட்டிலும் கஸ்தூரி கூறியுள்ளார். அவர் கூறுகையில், யாராச்சும் இவர் சொன்னதை கேட்டீங்களா. பாவம் இம்ரான் கான் (சர்பிராஸ் கானை பேட் செய்ய அவர் அறிவுறுத்தியிருந்தார், ஆனால் அவர் செய்யவில்லை) என்று பதிவிட்டுள்ளார். ஒரு பெரிய மனுஷன் ஒரு விஷயத்தை சொன்னா அதை காது கொடுத்து கேட்க வேண்டும். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல செயல்பட்டால் இப்படித்தான் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.