இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பற்றி கேலி, கிண்டல்... நடிகை ஸ்ரீப்ரியா வெளியிட்ட கண்டன பதிவு
Recommended Video
சென்னை:இலங்கை குண்டுவெடிப்பு பற்றி கேவலமான விமர்சனம் வைப்பவர்கள் மனித தன்மையற்றவர்கள் என்று நடிகை ஸ்ரீப்ரியா கடுமையாக பதிவிட்டிருக்கிறார்.
இலங்கையில் சர்ச் மற்றும் ஓட்டல்களில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 207 பேர் பலியாகினர். உலக அளவில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் பலரும் இந்த சம்பவம் பற்றி கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை ஸ்ரீப்ரியா இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இலங்கை குண்டுவெடிப்பு பேரதிர்ச்சி அளிக்கிறது...வேதனைக்குறிய செய்தி...மனிதம் எங்கே போயிற்று...
— sripriya (@sripriya) April 21, 2019
அந்த டுவிட்டர் பதிவை பலரும் கிண்டல் செய்து விமர்சித்து வருவதாக தெரிகிறது. இதனை அறிந்த ஸ்ரீப்ரியா டுவிட்டரில் மீண்டும் ஒரு பதிவிட்டுள்ளார்.
இலங்கை சம்பவத்தை பற்றி வருத்தத்தை தெரிவிக்கும் tweetற்கு சம்மந்தமில்லாத கிண்டல் மற்றும் கேவலமானcomment களை பதிவு செய்யும் மனிததன்மைக்கு எதிரானவர்களை மகிழ்ச்சியுடன் நான்block செய்வேன்...இதுப்போன்றவர்கள் .....😡😡
— sripriya (@sripriya) April 21, 2019
அதில் அவர் கூறியிருப்பதாவது:இலங்கை சம்பவத்தை பற்றி வருத்தத்தை தெரிவிக்கும் டுவீட்டுக்கு சம்மந்தமில்லாத கிண்டல் மற்றும் கேவலமான கமென்ட்டுகளை பதிவு செய்யும் மனித தன்மைக்கு எதிரானவர்களை மகிழ்ச்சியுடன் நான் பிளாக் செய்வேன்...இதுப்போன்றவர்கள்"என்று அவர் தெரிவித்துள்ளார்.